கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர் கூட்டம் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட முடிவு

கந்தவகோட்டை, பிப்.25: கந்தவகோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயல்வீராகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கந்தவகோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயல்வீராகள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் குஞ்சப்பா தலைமை வகித்தார்.. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், தலைமை செயற்குழு உறுப்பினா் கீரை.தமிழ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனா். கந்தா–்வகோட்டை ஒன்றியச் செயலாளா் பரமசிவம் வரவேற்றார்.

வடக்கு மாவட்ட பொறுப்பாளா் செல்லப்பாண்டியன் பேசுகையில் கந்தா;வகோட்டை தெற்கு ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சி செயலா் பதவிக்கு பதிலாக தற்போது 126 பதவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 15வது உட்கட்சி தோ்தலுக்காக 9 போ் கொண்ட தோ்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கிளை செயலாளா; பதவிக்கு போட்டியின்றி தோ;ந்தெடுக்க முயலுங்கள். புதுக்கோட்டையில் நடைப்பெறவுள்ள கருணாநிதி உருவ சிலை திறப்பு விழாவில் தெற்கு ஒன்றியம் சார்பாக 1லட்சம் போ; பங்கேற்க தயாராகுங்கள் என்றார். முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் பேசினார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலா; ஸ்டாலின், நகரச்செயலாளா் ராஜா, ஒன்றியக் கவுன்சிலா;கள் ராஜேந்திரன், திருப்பதி, முருகேசன் உட்பட பலா;கலந்துக் கொண்டனா். மார்ச் 1ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: