திரளான பக்தர்கள் தரிசனம் வெவ்வேறு இடங்களில் விபத்து

புதுக்கோட்டை,பிப்.25: புதுக்கோட்டை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்தில் வாலிபர், முதியவர் பலியாயினர்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராசிபுரத்தில் இருந்து 2 பைக்குகளில் 6பேர் மாத்தூர் அருகே உள்ள ஆவூர் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர்.ஆட்டுக்காரன்பட்டி அருகே சென்றபோது, இவர்களது2 பைக்குகளும் நிலை தடுமாறி புளிய மரத்தில் அடுத்தடுத்து மோதின. இதில் சுப்பிரமணியன் மகன் சண்முகசுந்தரம்(17) அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து மண்டையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி வழியாக கிளாங்காடு செல்லும் அரசு பேருந்து வடவாளம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்கரையில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதியது.அப்போது, அப்பகுதியில் நின்றிருந்த வடவாளம் கருப்பையா(65), வடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி மாணவர்களான முள்ளூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன்(15), சரவணன்(15), ச.சரவணக்குமார்(15) ஆகியோர் மீது மோதியது. இதில் கருப்பையா அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.காயம் அடைந்த மாணவர்கள் 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Related Stories: