புதுக்கோட்டை,பிப்.25: புதுக்கோட்டை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்தில் வாலிபர், முதியவர் பலியாயினர்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராசிபுரத்தில் இருந்து 2 பைக்குகளில் 6பேர் மாத்தூர் அருகே உள்ள ஆவூர் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர்.ஆட்டுக்காரன்பட்டி அருகே சென்றபோது, இவர்களது2 பைக்குகளும் நிலை தடுமாறி புளிய மரத்தில் அடுத்தடுத்து மோதின. இதில் சுப்பிரமணியன் மகன் சண்முகசுந்தரம்(17) அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து மண்டையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.