புதுக்கோட்டை, பிப்.25: புதுக்கோட்டையில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டரிடம் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் கட்சியினர் மரக்கன்றுகளுடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை சுற்றியுள்ள வனக்காடுகளை அழித்துவிட்டு, தைலமரங்களை வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர். இந்த தைலமரக்காட்டிற்குள் இருந்த பாம்புகள், குரங்கு, மயில், மான் மற்றும் பல வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி சாலைகளில் உள்ள மரங்களில் வசித்து வருகின்றன.