வேடசந்தூர், பிப். 25: வடமதுரை அருகே புதுப்பட்டி பிரிவில் குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ள பயணிகள் நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. வடமதுரை ஒன்றியம் காணப்பாடி ஊராட்சிக்குட்பட்டது புதுப்பட்டி பிரிவு. இங்குள்ள பயணிகள் நிழற்குடை தரைமட்டத்தில் இருந்து 2 அடி பள்ளத்தில் உள்ளது. இதனால் இதனை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உரிய பராமரிப்பு இல்லாததால் இந்த நிழற்குடை பாழடைந்து கிடக்கிறது. இதனை பயன்படுத்தி குடிமகன்கள், இதை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.