செந்துறையில் இன்று மின்தடை

நத்தம், பிப். 25: செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (பிப். 25, செவ்வாய்) நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, மாமரத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, ரெங்கை சேர்வைக்காரன்பட்டி, திருநூத்துப்பட்டி, குடகிபட்டி, மணக்காட்டூர், கோசுகுறிச்சி, மங்களப்பட்டி, பிள்ளையார்பட்டி ஆகிய ஊர்களில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: