அரசு பள்ளி ஆண்டு விழா

மதுரை, பிப். 25: மதுரை மாவட்டம் அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் ஆண்டறிக்கை வாசித்தார். உதவித் தலைமை ஆசிரியர் வாசிமலை வரவேற்றார். விழாவில் முன்னாள் மாணவர் சங்க தலைவர் டாக்டர் அல்லா ரைசல், நிர்வாகிகள் வழக்கறிஞர் கண்ணன், முரளி, ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா மதிவாணன், கல்விக்குழு தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். விளையாட்டு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஆசிரியைகல் கீதமீனப்ரியா, கற்பகலதா, சித்ரா, சாந்தி, சங்கரலிங்கம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.

Related Stories: