ஜெயலலிதா பிறந்த நாள் விழா

மதுரை, பிப். 25: ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே.நகர் ஆர்ச் அருகே உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக பொருளாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் மேயர் திரவியம், முன்னாள் எம்எல்ஏ அண்ணாத்துரை, பகுதிச் செயலாளர்கள் ஜெயபால், அண்ணாநகர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அமமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெபால் தலைமையில் அக்கட்சியினர் நகரில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.    மேலூர்: மேலூர் செக்கடி, நாகம்மாள் கோவில், கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்ட், கருங்காலக்குடி ஆகிய இடங்களில் ஜெயலலிதா உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அதிமுகவினர், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். செக்கடியில் இருந்து ஊர்வலமாக சென்று பஸ் ஸ்டாண்ட் முன்பு உள்ள உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அழகர்கோவிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேலூர் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 3 பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், மேலூர் ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றிசெழியன், மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர் ஜபார் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர்:இதேபோல், அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. இதில் அலங்காநல்லூர் முனியாண்டி கோயிலில் சிறப்பு அபிஷேகமும், அன்னதானமும் நடந்தது. இந்த விழா ஒன்றிய அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.அன்னதானத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தொடங்கிவைத்தார். தொடர்ந்து ஒன்றிய நகர்வார்டு பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பையா, அவைதலைவர் பாலகிருஷ்ணன், நகர செயலாளர்கள் அழகுராசா, குமார், ஊராட்சிமன்ற தலைவர்கள் சேதுசீனிவாசன், சர்மிளாஜி, சுதாமுருகன், திருநாவுக்கரசு, கூட்டுறவுசங்கதலைவர்கள் சுந்தரராகவன், பாலாஜி, மற்றும் நிர்வாகிகள் மாணிக்கம், மதலையப்பன், கார்த்திக், செந்தில்குமார்,தாமரை, பாண்டுரெங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் மேற்கு ஒன்றியம் அரியூர், அதலை, நெடுங்குளம், தோடநேரி, சமயநல்லூர் உள்ளிட்ட இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரனங்களும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜெகதாராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.வாடிப்பட்டி:சோழவந்தான் தொகுதி அதிமுக சார்பில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம் தலைமை வகித்து குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி, முன்னாள் துணை சேர்மன் ராஜேஸ்கண்ணா, பேரூர் செயலாளர் பாப்புரெட்டி கூட்டுறவு சங்க தலைவர்கள் உங்குச்சாமி, அக்ரோ தலைவர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: