ராமநாதபுரம், பிப்.25: ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம், அரசு மேல்நிலை பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மாணவிகள் அனைவரும் மனித சங்கிலி ஏற்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் மனித சங்கிலியை தலைமை ஏற்று தொடக்கி வைத்தார். மாணவர்கள் சாத்தான்குளம் ஊராட்சி சாலையில் மனித சங்கிலி ஏற்படுத்தினர். மனித சங்கிலி நிகழ்வில் ஆசிரியர்கள் சாம்ராஜ், கதிர்மணி, வத்சலா தேவி, புனித ராணி, யமுனா, சுமதி மற்றும் உடற்கல்வி கணிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ,மாணவிகள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்தனர்.