மின் கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்த டிராக்டர்

தொண்டி. பிப்.25:  தொண்டி அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில்  மின் கம்பி உரசி தீபிடித்து எரிந்தது. பொதுமக்கள் தீயை அனைத்தனர். தொண்டி அருகே உள்ள சோலியக்குடி வயற்காட்டில் நம்புதாளையை சேர்ந்த சேவியர் என்பவரின் டிராக்டரில் வைகோல் ஏற்றி வந்தனர். தாழ்வாக சென்ற மின் கம்பத்தில் வைக்கோல் உரசியதால் தீப்பிடித்துள்ளது. காற்றின் வேகத்தில் தீ மளமளவௌ பிடித்து எரிந்துள்ளது.

இதையறிந்த பொதுமக்கள் அருகில் இருந்த குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி அணைத்தனர். எனினும் முற்றிலுமாக டிராக்டர் எரிந்து நாசமானது. குடியிருப்பு பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதால் பெரும் பதட்டம் நடைபெற்றது.

Related Stories: