சிவகங்கை, பிப்.25: அரசு ஐ.டி.ஐ மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி பெற அளிக்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர்(பொ) முருகன் விடுத்துள்ள அறிக்கையில், ‘சிவகங்கையில் அரசு ஐ.டி.ஐ மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தமிழகத்தில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு சிறு குறு, நடுத்தர மற்றும் பெறு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.