தேனி, பிப். 25: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை நேற்று தேனியில் அதிமுகவினர் கொண்டாடினர். நகர அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், தேனி நகர் நேரு சிலை மற்றும் அல்லிநகரத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கு தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதனை மாவட்ட செயலாளர் சையதுகான் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், நகர தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஜெயபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் ஆப்பிள்முருகன், ஜெயக்குமார், மயில்வேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.