ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தேனி, பிப்.25: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்யக்கோரி, தேனியில் தமிழ்ப்புலிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழ்ப்புலிகள் கட்சியின் தேனி மாவட்ட இளம்புலிகள் அமைப்பின் துணைச்செயலாளர் மாரி தலைமையில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், இக்கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனர்.

Related Stories: