தேனி, பிப். 25: கம்பத்தில் சலவைத் தொழிலாளர்களுக்கு சொந்தமான கோயில் இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டுவதாக, அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, தேனி மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
கம்பத்தில் உள்ள ஓடைக்கரைத் தெருவைச் சேர்ந்த பென்னிகுக் சலவைத் தொழிலாளர் சங்க தலைவர் சிவக்குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள், தேனியில் கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கம்பம் நகரில் உள்ள சுருளிபடடி சாலையில் தொட்டமன்துறை அருகே சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப்பட்ட கருப்பசாமி, பெத்தனசாமி, நாகம்மாள், காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து திருவிழாக்களை நடத்தி வருகிறோம்.