திருவில்லிபுத்தூர் அருகே கரும்பு காட்டில் பயங்கர தீ விபத்து

திருவில்லிபுத்தூர், பிப்.25:  திருவில்லிபுத்தூர் அருகே கரும்பு காட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி அணைத்தனர்.திருவில்லிபுத்தூர் அருகே அச்சங்குளத்தை சேர்ந்தவர் தங்க சுப்பிரமணியன். அப்பகுதியில் இவருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கரும்புக்காட்டில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் அனைத்து பகுதிகளிலும் தீ வேகமாக பரவியது. இது குறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு கிராமமக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை நிலைய அதிகாரி ஜெயராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கரும்புத் தோட்டத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே தீ அணைக்கப்பட்டது.  விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: