மரம் முறிந்து விழுந்து வாலிபர் படுகாயம்

புதுச்சேரி,  பிப். 25: குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி புதுச்சேரி, லாஸ்பேட்டை  சாலைகளில் நேற்று போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு  ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி எதிரே  சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென முறிந்து நடுரோட்டில் விழுந்தது.  இதில் அந்த வழியாக பைக்கில் சென்ற 2 பேர் சிக்கினர்.வண்டியை ஓட்டிவந்த  நபர் மயிரிழையில் தப்பிய நிலையில், பின்னால் அமர்ந்து வந்த வாலிபரின்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. இதுதொடர்பாக புதுவை வடக்கு டிராபிக் போலீசார் வழக்குபதிந்து  விசாரித்து வருகின்றனர்.

Related Stories: