எலிமருந்து தின்று இளம்பெண் தற்கொலை

புதுச்சேரி,  பிப். 25: மேட்டுப்பாளையத்தில் 2 வருடமாக கணவரை பிரிந்து வாழ்ந்துவிட்டு  வீடு திரும்பிய இளம்பெண், தன்னிடம் யாரும் பேசாததால் மனவிரக்தியில் எலிமருந்து  சாப்பிட்டு தற்கொலை செய்தார்.புதுவை, மேட்டுப்பாளையம், காந்தி  திருநல்லூர், ரங்கசாமி வீதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (35), தொழிலாளி.  இவரது மனைவி ரம்யா (30). 5 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமான  நிலையில், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு கடந்த 2 வருடமாக கணவரை பிரிந்து  ரம்யா தனியாக வசித்தாராம். இத்தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், ரம்யாவை  அவரது கணவரும், உறவினர்களும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதனிடையே ஒரு  வாரத்திற்கு முன்பு ரம்யா, தனது கணவர் வீட்டிற்கு திரும்பிய நிலையில்  அவரிடம் யாரும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில்  இருந்த ரம்யா, எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.  அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு  மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

பின்னர் அங்கிருந்து  மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் கொண்டு  செல்லப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர்  இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார்  வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். கணவரும், உறவினர்களும் பேசாததால்  அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா அல்லது வேறு காரணமா? என்பது தொடர்பாக  தீவிர விசாரணை நடக்கிறது.

Related Stories: