இளைஞருக்கு கத்திக்குத்து

புவனகிரி, பிப். 25:  புவனகிரி அருகே உள்ள தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் இருந்த போது அதே கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் (30) என்பவர் அங்கு வந்துள்ளார். பின்னர் பார்த்திபன் சரவணனிடம், ஏன் அடிக்கடி எனது தம்பியை மது அருந்த அழைத்துச் செல்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன், சரவணனை தலையில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: