செய்யாறு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 473 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர், எம்எல்ஏ வழங்கினர்

செய்யாறு, பிப்.25: செய்யாறில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 473 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர்  சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் நேற்று முன்தினம் வழங்கினர்.செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் பங்கேற்று, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 473 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.

Related Stories: