அணைக்கட்டு, பிப்.25: அணைக்கட்டு அடுத்த ஊசூரில் அம்மன் கோயில் பின்புறமுள்ள அரச மரத்தில் இருந்து ரத்தம் வடிந்ததாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.அணைக்கட்டு தாலுகா ஊசூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பின்புறத்தில் நாகதேவதையம்மன் கற்சிலை அருகில் 100 ஆண்டு பழமையான அரச மரம் உள்ளது. இங்கு தினமும் விளக்கு ஏற்றி கிராம மக்கள் பூஜை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக மரத்தின் மேல் உள்ள ஒரு கிளையில் இருந்து சிவப்பு நிரத்தில் ரத்தம் போன்று சொட்டு சொட்டாக நீர் வடிந்தது. காலை, மாலை நேரத்தில் மட்டுமே சொட்டு, சொட்டாக வடிந்து வந்ததால் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று காலை மரத்தின் மேல் உள்ள கிளையில் இருந்து சொட்டு சொட்டாக ரத்தம் போன்று வடிந்துள்ளது. காலை நாகதேவதை கற்சிலையை சுத்தம் செய்ய அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அதனை பார்த்துள்ளார். தொடர்ந்து, அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.