டெம்போ டிரைவர் மீது தாக்குதல்

தென்தாமரைகுளம், பிப். 25:சாமிதோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்(48). டெம்போ டிரைவர். இவர் தனது உறவினரான சாஸ்தான் கோவில் விளையைச் சேர்ந்த திரவியம்(51) என்பவருக்கு பணம் கடன் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று ஜனார்த்தனன், திரவியத்தின் வீட்டுக்கு சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.  ஆத்திரம் அடைந்த திரவியம், தனது மகன் மகேஷ்(21) என்பவருடன் சேர்ந்து ஜனார்த்தனத்தை கம்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  காயமடைந்த ஜனார்த்தனன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திரவியத்தை கைது செய்தனர்.

Related Stories: