பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

பூதப்பாண்டி, பிப்.25: பூதப்பாண்டியை அடுத்த தடிக்காரன்கோணம் மேற்கு வீரப்புலி பகுதியை சேர்ந்தவர் ரத்னகுமார். இவரது மகன் ஸ்டான்லி ஜோஸ் (31). திருமணமாகவில்லை. கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்டான்லி ஜோஸ் நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வந்து வீட்டில் படுத்துள்ளார். நேற்று காலை எழுந்து பின்பக்க கதவை திறந்து வெளியே வந்தவர், அருகில் இருந்த 8 அடி பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அவரது தாயார் லலிதா மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து ஸ்டான்லி ஜோஸ் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொண்டு வருவதற்குள் மயக்கமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஸ்டான்லி ஜோஸை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி கீரிப்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: