சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது குமரியில் 4 மையங்களில் 896 பேர் எழுதுகிறார்கள்

நாகர்கோவில், பிப்.25 :  சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள ராஜாஸ் இன்டர்நேசனல் ஸ்கூல்,  திருவட்டார் ஆற்றூர் என்.வி.கே.எஸ். ஸ்கூல், சிதறால் என்.பி. வித்யாகேந்திரா ஆகிய 4 மையங்களில் மொத்தம் 896 பேர் எழுதுகிறார்கள். நேற்று தொடங்கிய தேர்வு, மார்ச் 20ம் தேதி முடிவடைகிறது. 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் பிப்.27ல் தொடங்கி, மார்ச் 30ம் தேதி முடிகிறது. இதற்கான ஏற்பாடுகள் குமரி மாவட்ட சிபிஎஸ்இ ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் செய்யப்பட்டு இருந்தது.

Related Stories: