கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்

சென்னை, பிப்.25: சென்னை புளியந்தோப்பு தட்டான் குளத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (25). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் மது போதையில் இவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர மறுத்த சுதாகரை கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து வயிற்றுப்பகுதியில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுதாகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ரகுபதி (27)  மற்றும் மணிகண்டன் (27) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பீடி மணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: