ஜெ. பிறந்தநாள் விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர், பிப். 25: பூந்தமல்லி ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பானவேடு தோட்டம், கோலப்பன்சேரி, வயலாநல்லூர், காவல்சேரி, கீழ்மணம்பேடு, வெள்ளவேடு,  கொரட்டூர், நேமம், கூடப்பாக்கம், செம்பரம்பாக்கம்   ஆகிய இடங்களில் அதிமுக கொடியேற்றி இனிப்பு, அன்னதானம், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய செயலாளர் காட்டுப்பாக்கம் ஜி.திருநாவுக்கரசு தலைமை தாங்கி, ஏழை தாய்மார்களுக்கு இலவச புடவைகளையும், அன்னதானமும் வழங்கினார். நிர்வாகிகள் க.வைத்தியநாதன், கே.ஜி.டி.கவுதமன் மற்றும் உமாசந்திரன், சுந்தரமூர்த்தி, ஆறுமுகம், நேமம் யு.ராக்கேஷ், மணி, தங்கராஜ், தனசேகர், சிவக்குமார், பால்இசக்கியேல், பாளையம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: