புரட்சிபாரதம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

பொன்னேரி, பிப்.25:  திருவள்ளூர் வடக்கு மாவட்டம், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செ.ராஜா தலைமையில், நேற்று முன்தினம்  பொன்னேரியில் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கலந்துகொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிக உறுப்பினர்களை சேர்த்து, கிளைகள் அமைப்பது. புதிய நிர்வாகிகளை நியமித்து, கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றி, இலவச மருத்துவமுகாம் நடத்துவது என்பது உள்பட பல தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பொன்னேரி, ஆரணி, சோழவரம் பகுதி நிர்வாகிகள் எராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: