திருத்தணி தளபதி விநாயகம் கல்லூரி ஆண்டு விழா

திருத்தணி, பிப். 25: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தளபதி விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரி வளாகத்தில். முதலாம் ஆண்டு துவக்க விழா மற்றும் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளியின் 25வது ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு கல்விக் குழுமத்தின் நிறுவனர் எம்.கிருஷ்ணசுவாமி தலைமை தாங்கினார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகித்தார். குழுமத்தினர் தாளாளர் எஸ்.பாலாஜி அனைவரையும் வரவேற்று  பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா யுனிவர்சிட்டி பார்மர் வைஸ் சேலஞ்சர் பேராசிரியர் டி.விசுவநாதன் கலந்துகொண்டு  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.  தொடர்ந்து பள்ளி மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளியின் முதல்வர் விநாயகம் நன்றி கூறினார்.

Related Stories: