லாரி மோதி வாலிபர் பலி

புழல், பிப். 25: சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் யோகசுந்தர் (23). இவர் செங்குன்றத்தில் உள்ள அரிசி ஆலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இந்த ஆலைக்கு சொந்தமான பாடியநல்லூர் அரிசி கடையில் இருந்து கோயம்பேட்டில்  உள்ள மற்றொரு அரிசி கடைக்கு நேற்று பிற்பகல் யோகசுந்தர் தனது இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலை வழியாக கோயம்பேடு நோக்கி சென்றார்.அப்போது அவ்வழியாக வந்த லாரி இவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து யோகசுந்தர் ரத்த வௌ்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

Related Stories: