காயலான் கடையில் பதுக்கிய செம்மரக் கட்டைகள் வேனுடன் பறிமுதல்

சென்னை, பிப்.25: பெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில் பழைய  இரும்புக்கடையில் பதுக்கி இருந்த ெசம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதெடர்பாக கடை உரிமையாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.பெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் முத்து (32). இவரது கடையில் செம்மர கட்டைகளுடன் மினி லோடு வேன் இருப்பதாக பெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்  இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மினி லோடு வேனில் செம்மர கட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து வேன் மற்றும் 5 அடி உயரம் கொண்ட 6 செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடை  உரிமையாளர் முத்துவை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, பெரும்புதூர் கோட்ட வனத்துறை அதிகாரிகளிடம் செம்மர கட்டைகளை ஒப்படைத்தனர்.மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், செம்மரக்கட்டைகளை எங்கிருந்து கடத்தி வந்தார். எங்கு கொண்டு செல்ல இருந்தது. இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது உள்பட  பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: