கணவனுக்கு கள்ளத்தொடர்பு மனைவி தூக்கிட்டு தற்கொலை

ஆவடி, பிப்.25: ஆவடி அருகே உப்பிரபாளையம் கிராமத்தில் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததையடுத்து மனம் உடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்த பொத்தூர், உப்பரபாளையம், கே.சி.ஆர் நகரை சேர்ந்தவர் கண்ணன் (40). இவரது மனைவி சசிகலா (34).இவர்களுக்கு திருமணமாகி 15ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில், கண்ணனுக்கும் திருமுல்லைவாயலை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை தெரிந்து, சசிகலா கண்ணனை கண்டித்து வந்துள்ளார். இருந்த போதிலும் அவர், அந்த பெண்ணுடன்  கள்ளத்தொடர்பை துண்டிக்கவில்லை. இதனால், சசிகலா, மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை சசிகலா வீட்டு மாடியில் உள்ள முன் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: