ஆலந்தூர், பிப்,25: பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு உறுப்பினர்களின் பதவி 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு பகுதி ராணுவ கட்டுபாட்டில் உள்ளது. இங்கு, 7 வார்டுகள் உள்ளன. இதில், பரங்கிமலை பகுதியில் 4 வார்டுகளும், பல்லாவரம் பகுதியில் 3 வார்டுகளும் உள்ளன. இங்கு நடக்கும் தேர்தலில் போர்டு தலைவராக ராணுவ அதிகாரியும், துணைத் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களை தேர்தல் நடத்தி பொதுமக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.இந்த போர்டுக்கான தேர்தல் கடந்த 2015 ஜனவரியில் நடந்தது. இதில், போர்டு தலைவராக ராணுவ அதிகாரி பிரிகேடியர் விக்ரம் சிங் அறிவிக்கப்பட்டார். துணை தலைவராக 2வது வார்டை சேர்ந்த தேன்ராஜா, 1வது வார்டு ஜெயந்திமாலா, 3வது வார்டு குணசேகரன், 4வது வார்டு லாவண்யா, 5வது வார்டு ஆனந்தகுமார், 7வது வார்டு சொக்கம்மாள் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றனர். 6வது வார்டில் திமுக சார்பில் விஜயசங்கர் வெற்றி பெற்றார்.