செங்கல்பட்டு மாவட்ட ஆணழகன் போட்டி 250 வீரர்கள் பங்கேற்பு

மாமல்லபுரம், பிப்.25: செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில், ‘மாமல்லன் கிளாசிக் 2020’ என்ற பெயரில் மாவட்ட ஆணழகன் போட்டி மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. மாஸ்டர் அரசு தலைமை தாங்கினார். கோல்டு பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில், செங்கல்பட்டு மாவட்ட உடற்பயிற்சி கூடங்களை சேர்ந்த 250 பேர் பங்கேற்றனர். உடல் எடை அடிப்படையில் 7 பரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. 7  பரிவுகளில் முதல் 3 இடங்களை பிடித்த 21 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆணழகன் போட்டியில், தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக், முதல் இடத்தை பிடித்து செங்கல்பட்டு மாவட்ட ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு, ₹25 ஆயிரமும், 2ம் இடம் பிடித்த கேளம்பாக்கம் நடராஜனுக்கு ₹ 10 ஆயிரம், 3ம் இடம்  பிடித்த குணசேகரனுக்கு ₹5 ஆயிரம் பெற்றனர்.

இவர்களுக்கு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செங்கல்பட்டு மாவட்ட உரிமையியல் நீதிபதி பார்த்திபன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன், அதிமுக மாவட்ட துணை செயலாளர்  எஸ்வந்த் ராவ், மல்லை திமுக நகர செயலாளர் வெ.விசுவநாதன், மல்லை அதிமுக நகர செயலாளர் கணேசன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கேடயம், சான்றிதழ்களை வழங்கினர்.இதில், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சமுதாய மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புத்தக பை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாடி ஸ்கல்ச்சர் உடற்பபயிற்சி கூடத்தை சேர்ந்த  வினோத்ராஜ், கேசவன் ஆகியோர் செய்தனர்.

Related Stories: