மாமல்லபுரம், பிப்.25: செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில், ‘மாமல்லன் கிளாசிக் 2020’ என்ற பெயரில் மாவட்ட ஆணழகன் போட்டி மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. மாஸ்டர் அரசு தலைமை தாங்கினார். கோல்டு பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில், செங்கல்பட்டு மாவட்ட உடற்பயிற்சி கூடங்களை சேர்ந்த 250 பேர் பங்கேற்றனர். உடல் எடை அடிப்படையில் 7 பரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. 7 பரிவுகளில் முதல் 3 இடங்களை பிடித்த 21 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆணழகன் போட்டியில், தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக், முதல் இடத்தை பிடித்து செங்கல்பட்டு மாவட்ட ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு, ₹25 ஆயிரமும், 2ம் இடம் பிடித்த கேளம்பாக்கம் நடராஜனுக்கு ₹ 10 ஆயிரம், 3ம் இடம் பிடித்த குணசேகரனுக்கு ₹5 ஆயிரம் பெற்றனர்.