அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

காஞ்சிபுரம், பிப்.25: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த கம்பராஜபுரம் விவசாயிகள், கலெக்டர் பொன்னையாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.கம்பராஜபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பில் நெல் மகசூல் செய்துள்ளோம். தற்போது விளைச்சல் முடிந்து அறுவடை நிலையியில் உள்ளது.ஆனால், அரசின் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் தனியாரிடம் நெல் விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. சிரமப்பட்டு விளைவித்த நெல்லுக்கு உரியவிலை கிடைக்காததால் விவசாயிகள்  அடுத்த போகம் பயிர் செய்யட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, எங்கள் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: