மாமல்லபுரம், பிப். 25: மாமல்லபுரத்தில் உள்ள சீ சமூக சேவை நிறுவனம் சார்பில், நலிவடைந்த ஏழை, எளிய கல்லூரி மாணவிகள் 25 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சீ சமூக சேவை நிறுவன தலைவர் தேசிங்கு தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் ராமச்சந்திரன், சமூக சேவகி காயத்திரி தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர் நீதிமன்ற சட்ட ஆலோசகர் தனபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நலிவடைந்த ஏழை, எளிய கல்லூரி மாணவிகள் 25 பேருக்கு மொத்தம் ₹7.25 லட்சம் கல்வி உதவி தொகை வழங்கினார்.நிகழ்ச்சியில், மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.