காஞ்சி மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்

காஞ்சிபுரம், பிப்.25: காஞ்சிபுரம் மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பாஜ மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன், மாநில செயலாளர் கே.டி.ராகவன், காஞ்சி கோட்டப் பொறுப்பாளர் பாஸ்கர், கோட்ட அமைப்புச் செயலாளர் ராம்சேகர், முன்னாள் காஞ்சிபுரம் வடக்கு  மாவட்ட தலைவர் மோகனராஜா ஒப்புதலின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர்களாக ஓம்சக்தி பெருமாள், சீதா செந்தில்குமார், வாசன், அமுதரசன், அஞ்சனாதேவி அரசன், வெங்கடலட்சுமி, பிரேமா ஆகியோரும், மாவட்ட செயலாளர்களாக  ராதாகிருஷ்ணன், பார்த்தசாரதி,  அம்மு, வஜ்ரவேலு, அரிகிருஷ்ணன், ரங்கநாயகி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட பொதுச் செயலாளர்களாக, அய்யாதுரை, கூரஜ்ம் விஸ்வநாதன், மதியழகன் ஆகியோரும், மாவட்டப் பொருளாளராக முருகானந்தமும்  நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: