சுரங்கப்பாதை திறப்பு

சென்னை: அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல 2 சுரங்க நடைபாதைகள் மட்டுமே இருந்தது. இதனால் ஏற்கனவே அரசினர் தோட்டம் முதல் வாலாஜா சாலை வரை செயல்பட்டு வந்த சுரங்க நடைபாதையை புனரமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக சுரங்க நடைபாதை முழுவதும் டைல்ஸ் ஒட்டும் பணி, மின் இணைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இப்பணி முடிவடைந்ததையடுத்து, நேற்று சுரங்க நடைபாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

Related Stories: