சாத்தூர், பிப். 21: சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் செல்லத்தாய், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) காஜாமைதீன் பந்தே நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 2019 டிசம்பர், 2020 ஜனவரிக்கான ஊராட்சி செலவினங்கள் குறித்த அஜண்டா வாசிக்கபட்டது. அதில் உள்ள தீர்மானங்கள் ஒன்றிய உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விளக்கமளித்தார்.