ராஜபாளையத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு

ராஜபாளையம், பிப். 21: ராஜபாளையம் போக்குவரத்துக் கழகம் மற்றும் காப்பீட்டு நிறுவனம் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்து காவல்துறை சார்பு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் சரவணன் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காப்பீட்டுக் கழக அலுவலர்கள் இணைந்து பொதுமக்களுக்கு டூவீலரில் செல்லும்போது ஹெல்ெமட் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தினர். சாலையில் போக்குவரத்து விதிகள் குறித்து, விபத்து ஏற்படாமல் பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை எடுத்துரைத்தனர். சாலை விதிமுறைகள் குறித்து துண்டு பிரசுரமும்  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Related Stories: