ஆர்.எஸ்.மங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.21: ஆர்.எஸ்.மங்கலத்தில் மக்கள் பாதையின் சார்பாக நகரில் மரங்கள் இல்லாத பகுதிகளில்  மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் ஆசாத் தெருக்களில் மரக்கன்றுகள் நடும் பணியை மக்கள் பாதையின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார். மரக்கன்றுகள் மற்றும் பாதுகாப்பு வலைக்கான உதவிகளை அல் மஜூனாஸ் சாகுல், அப்துல் சமது ஆகியோர் செய்தனர். இந்நிகழ்வில் மூஸா வாலிபால் கிளப் தலைவர் முன்தஸர், கபார் கான் மற்றும் வாலிபால் வீரர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரம் வளர்ப்பதனால் ஏற்படக்கூடிய பயன்கள் பற்றி எடுத்து கூறி இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Related Stories: