பரமக்குடி, பிப்.21: பரமக்குடியில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகர் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கிறது. இதற்கு ஏற்றாற்போல் மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பரமக்குடியில் மணிநகர், ஒட்டப்பாலம், ஐந்து முனை, கிருஷ்ணா தியேட்டர், ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஐந்துமுனை, ஆற்று பாலம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது.