செயல்படாத சிக்னலால் அடிக்கடி நடக்குது விபத்து

பரமக்குடி, பிப்.21: பரமக்குடியில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகர் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கிறது. இதற்கு ஏற்றாற்போல்  மக்கள் தொகை மற்றும் வாகனங்கள்  அதிகரித்துள்ளது. இதனால் பரமக்குடியில்  மணிநகர், ஒட்டப்பாலம், ஐந்து முனை, கிருஷ்ணா தியேட்டர், ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஐந்துமுனை, ஆற்று பாலம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படாமல்  உள்ளது.

வாகனங்களை ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே செயல்படாமல் உள்ள ஐந்து முனை மற்றும் ஆற்றுப்பாலம் பகுதி சிக்னல்களை செயல்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிதாக ஓட்டபாலம் பகுதியில் ரவுண்டானா அமைத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: