ஊத்துக்கோட்டை, பிப். 21: ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் உள்ள தார்சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள், வேலைக்கு செல்வதற்கும், விவசாயிகள் கோயம்பேட்டிற்கு பூ, காய்கறி போன்றவற்றை எடுத்து செல்வதற்கும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் தொளவேடு கிராம சாலையை பயன்படுத்தி தண்டலம், பாலவாக்கம் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தொளவேடு கிராம சாலை குண்டும், குழியுமாக மாறி படுமோசமாக காணப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்தனர்.