திருத்தணி, பிப். 21: திருத்தணி அருகே உள்ள நரசிம்ம சுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் கிராமத்தில் நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலை கிராமத்து மக்களே பராமரித்து வருகின்றனர். கோயிலை சுற்றியும் சுற்று சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. இதில் தினமும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம்.