பட்டப்பகலில் வீட்டை உடைத்து கொள்ளை

செங்கல்பட்டு, பிப்.21: செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் காந்தி சாலையை சேர்ந்தவர் கலா (எ) விக்டோரியா  (41). செங்கல்பட்டில் செல்போன் ரீசார்ஜ்  கடை நடத்தி வருகிறார். தனது தாய் பத்மாவுடன் தனியாக வசிக்கிறார். நேற்று  காலை கலா வழக்கம்போல் கடைக்கு சென்றார். தாய் பத்மா தாம்பரம் அடுத்த மணிமங்கலம் கிராமத்தில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். மாலை பத்மா வீடு திரும்பினார்.

அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள், ₹30 ஆயிரம் உள்பட ₹10 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Related Stories: