திருப்பரங்குன்றம், பிப்.21: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கோம்போ கார்டு எனப்படும் ஏடிஎம் அட்டையுடன் கூடிய பல்கலைக்கழக அடையாள அட்டை வழங்க எஸ்பிஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு எஸ்பிஐ வங்கியும், பல்கலைக்கழகமும் இணைந்து ஏடிஎம் கார்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்றது.இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன், பதிவாளர் சங்கர், எஸ்பிஐ வங்கியின் நிர்வாக துணை இயக்குனர் ஜெ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.