பிளஸ்-1 மாணவி மாயம்

சேலம், பிப்.21:சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் தீபா(17). இவர் அம்மாபேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு, வயிறு வலிப்பதாக கூறி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அன்றைய தினம் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, தீபா வீட்டில் இல்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தீபாவின் பெற்றோர், அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து, மாயமான தீபாவை தேடி வருகிறார்.

Related Stories: