தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு தீவிர சிகிச்சை

கெங்கவல்லி, பிப்.21: கெங்கவல்லி அருகே, கடம்பூரை சேர்ந்த 14 வயது சிறுமி, அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கேரளாவில் ரிக் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். சிறுமியை அவரது தாய் கடந்த 2 நாட்களாக திட்டியதால், நேற்று முன்தினம், மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளியின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில், மாணவியின் இடுப்பு எலும்பு முறிந்தது. பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு, 2வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: