தென்கரைக்கோட்டையில் நஞ்சுண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.21:  பாப்பிரெட்டிப்பட்டி அருகே தென்கரைக்கோட்டையில் பிரசித்தி பெற்ற கல்யாணராமர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில், உலக நன்மைக்காக மாசி மகா சிவராத்திரி பிரதோஷ வழிபாடு இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு நந்தி-நஞ்சுண்டேஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம், ஆராதனை, சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு சிறப்பு வழிபாட்டிற்கு பின்பு கன்னியப்பன்(எ) ஜலகடாசூரன் சூரசம்ஹாரம், தெருக்கூத்து நாடகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கல்யாண ராமர் அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

Related Stories: