தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல், பிப்.21: நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இன்று (21ம்தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களின் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்கிறார்கள். வேலை அளிப்போரும், வேலை தேடுபவர்களும் எவ்விதக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.  இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியானவர்கள் இன்று காலை 11 மணிக்கு, தங்களின் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: