திருச்செங்கோட்டில் திமுக இளைஞர் அணி கூட்டம்

திருச்செங்கோடு, பிப்.21: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞர்அணி அமைப்பாளர் மதுரா செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செங்கோடு -வேலூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், வருகிற 23ம் தேதி மதியம் 12 மணிக்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகிக்கிறார்.கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுவது, டிசிஎல் கிரிக்கெட் விழா நடத்துவது, இளைஞர் அணியினருக்கு அடையாள அட்டை வழங்குவது, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. ஆகவே நகர, ஒன்றிய, பேரூர், இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: