கவிதை, சிறுகதை உருவாக்க கவிஞர்களுக்கு அழைப்பு

கரூர், பிப். 21: கவிதை, சிறுகதைகளை உருவாக்க கவிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது.உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை கரூர் மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் கூட்டம் தமிழ்மாநிலத்துணைத் தலைவர் கடவூர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.இதில் பாவலர் சுரதாவின் கொள்கைகள் பற்றியும், உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் நோக்கம் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. பேரவையின் தமிழ்ப்பணிகள், தமிழ்மொழியின் சிறப்பினை இளைய சமுதாயத்திற்கு எடுத்துரைத்து, தமிழ்மொழியின் மாண்பினையும் மரபுகளை வளர்க்க நடவடிக்கை எடுப்பது, கவிதை, கட்டுரை, புதினங்கள், சிறுகதைகள் போன்ற பல படைப்புகளை உருவாக்க கவிஞர்கள் முன்வரவேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது.ராஜன் தலைவராகவும், நிர்வாகிகளாக பாஸ்கர், சரவணன், கரூர் கன்னல் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: