தூத்துக்குடி,பிப்.21: தூத்துக்குடியில் கின்ஸ் அகாடமியில் நாளை இலவச பயிற்சி மைய இணையதள சேவை துவக்க விழா நடக்கிறது.தூத்துக்குடி கின்ஸ் அகாடமி கடந்த மூன்று ஆண்டுகளாக போலீஸ், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. 2019ம் ஆண்டில் நடந்த பல்வேறு தேர்வுகளுக்கான நுழைவுதேர்வில் இங்கு பயின்ற 124 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அரசு போட்டித் தேர்வுகள் எழுதும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவியரும் தங்கள் சொந்த ஊரில் இருந்து கொண்டே படித்து தேர்வு பெறும் வகையில் கின்ஸ் அகாடமி ஒரு இலவச இணையதள சேவையை துவக்க இருக்கிறது. www.khinsacademy.com என்ற எங்களது கட்டணமில்லா இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் எழுதலாம். அவர்கள் எழுதிய தேர்வுகள் உடனுக்குடன் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணும், சரியான விடைகளும், தேர்வர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.